பொருட்பாகுபாடு
லைக்குச் செய்யவேண்டும் போரினை மிக விரும்பி அதனாற் படுக்கையில் உறக்கங் கொல்லானாய் முன் நாட்களில் நடந்த போரிற் புண்பட்ட யானைகள் நினைந்தும், யானையை வெட்டியும் தமக்கு வெற்றியினை யுன்டாகியும் இறந்துபோன போர்வீரரை நினைத்தும், அம்பு அழுந்திய வருத்தத்தால் தீநிகொல்லாமல் காதைச் சாய்த்துக்கொண்டு கலங்குங் குதிரைகளை நினைந்தும் மிடுந்த இறக்கம் உடையோனாய் ஒரு கையை அமளிமேல் வைத்து ஒரு கையினால் மூடியை தாங்கி இவ்வாறு நீலனினைந்து இருக்கிறான்.
எஉ-முதல் எய-வரையில் தலைவனது வெற்றியும், அவன் பாசறையில் இனிது உறங்குதலும்.
இனி இவ்வாறு முன்னாளிரவு உறக்கமின்றிகே கவலை யோடிருந்த தலைமகன் பின்னளிற் பகைவரைஎல்லாம் வெற்றி கண்டு, தன வழிய விரலாலே நல்ல வாகைமாளையினைச் சூடிக்கொண்டு, 'நாளைமாலையில் தலைவியைக் காண்போம்' என்னும் மகிழ்ச்சியினால் ஒரு கவளியுமின்றி பகையரசர் கேட்டு நடுங்குதற்கு காரணமான வெற்றி முரசு முழங்கும் தன பாசறை வீட்டில் இனிது துயில் கொண்டிருக்கிறான்.
அ-ய முதல் அ அ-வரையில்,பாட்டின் பொருட்காட்சி துயரமும் தேறுதலும் கலந்த நிலையிற் படுத்துக் கிடக்கும் தலைமகளின் முல்லைக்காட்டு பரளி கைக்கு திரும்பவும் மாறுகின்றது.
இனி இங்ஙனம் பாசறையில் இனிய உறக்கத்திலே கிடக்கின்ற தலைமகனைத் தன் பக்கதில்ர்ய்ர் காணாத தலைமைகள் அவனிடத்தே தகன் நெஞ்சினைப் போக்கி மை வருந்தும் வருத்தத்தால், முதுபெண்டிர் நற்சோர் கேடு வந்து ஆற்றுவிக்குஞ் சொர்களையுங் கேளாமல் வருந்துகின்றவன்,”இங்ஙனம் ஆற்றாமே வருந்தினால் அது நம்பெருமான் கற்பித்த சொல்