Page:முல்லைப் பாட்டு.pdf/55

From Wikisource
Jump to navigation Jump to search
This page has not been proofread.

பாவும் பாட்டின் நடையும். சகு விளங்கும். திருமுருகாற்றுப்படை முதலானஏனைச்சிலபாட்டுக் களுக்கு இம்முல்லைப்பாட்டு இவ்வாற்றுல் ஒருசிறிதுதாழ்ந்தது போலுமென அவைதம்மை ஒப்புநோக்கிக் கற்பார்க்கு ஒரு காற்றோன்றினுந்தோன்றும். என்றாலும் இப்பாட்டின்கட் கண்ட பொருட்கோவை நினைக்குந்தோறும் இன்பம் பயக் கும் விழுப்பம் வாய்ந்து மிளிர்கிமன்றது.

                  ------------

           
               பாவும் பாட்டின் நடையும்.
                       
          இனி இச்செய்யுள் நேரிசை அகவற்பாவாற் செய்யப்
        பட்ட தொன்றும்.இதில் ஒவ்வோர் அடியும் நான்கு சீர்க
        ளான் வகுக்கப்படும்;ஒவ்வொரு சீரும் இரண்டசைக்குக்
        குறையாமலும் மூன்றசைக்கு மேற்படாமலும் வரும்;புல
        வன் தான்கருதிய அரும்பொருள்களையெல்லாம் வருத்த
        மின்றி இலேசாகவெளியிடுவதற்கு இவ்வகவற்பாவினும் இசை
        வானது பிறிதில்லை. எதுகை யின்பமும் மோனையின்பமும்
        தோன்ற இயைந்து நிற்குஞ் சொற்கள் மற்றைப்பாஷை
        களிற் போலாது தமிழில் மிகப்பெருகியிருந்தாலும், அவ்
        வெதுகைநயம் மோனைநயங்களையே பெரிதும் நோக்காது
        பழைய தமிழ்ப்புலவர்களெல்லாரும் பொருள் சென்றவழியே
        சொற்கள்நிரம்பச் செய்யுட்கள்பலவும் இயற்றுவாராயினர்.
        பொருளொழுங்குமுதிரத் தங் கருத்துக்களை இணக்கிவைத்
        தோன்றும் எதுகைமோனைகளையே அமைப்பார்; எதுகை
        மோனைகளுக்குஏற்பப் பொருள்பொருத்துவாரல்லர்.பிற்கா
        லத்தில் அகவற்பாப்பாடின புலவர் பெரும்பாலும் ஒவ்வோரடி
        யிலும் முதற்சீரும் மூன்றுஞ்சீரும் எதுகைபொருந்தத் தொ
        டுத்தார்கள்;சிலர் இவ்விரண்டு அடிகள் முதற்சீர் எதுகை
        இணையக்கொளுவினர்.அவர் செய்த அப்பாட்டுக்கள் எல்லாம்
        முதலிலிருந்து இறுதிவரையில் ஒரே ஓசையாய் நடந்துகேட்
        பார்க்கு வெறுப்புணர்லினைத் தோற்றுவியாநிற்கின்றன.